Friday 9 May 2014

நீ'
தொடங்கியதை ,
நான்'
தொடர்கிறேன்..!
நீ"
என்
தொடர்பிலிருந்து ,
விலகினாலும் ,
தொடர்வேன்"
என் வழியாக 
உன்னை "
அது  நல்வழியாகவே ,
இருக்கும்.......!!!


Thursday 8 May 2014



நான் வாழ்கைப் படகில் நிதானித்து,
பயணிக்கத் தயார்..!
துடுப்பாக "நீ"
வந்தால் ..!!


# தன்னம்பிக்கை !

Wednesday 7 May 2014

அன்பே ..!
நான் பட்டணத்தில் , பறிதவிக்கிறேன் -
கிராமத்து கிளியே- அங்கு நீ நலமா?

இப்போது அதிகாலை ஐந்து மணி !
காற்றுப் புகமுடியாத தீப்பெட்டி அறைக்குள் உன் நினைவால் ஏங்குகிறேன்..!!

குளித்து முடித்த கூந்தலோடு,

 வாசலில் கோளம் போட
 வந்தவள் -தன்னை மறந்து,
 என் பெயரையெழுதி மகிழ்கிறாய்-சரிதானே ..!!

உன பளிங்கு முகத்தை கண்ணாடியில்

பார்தது - கண்"மை" கொண்டு, 
என் அரும்பு மீசை வரைந்து, 
அழுது , அழுது அழகு பார்க்கிறாய் - சரிதானே ..!!

பட்டணத்து "பவுடர்களுக்கிடையே "

இந்த மஞ்சள் முகத்தின் முகவரியை
தொலைத்து விடுவீர்களோ -என்று 
கவலை தாங்கி இருக்கின்றாய் - சரிதானே..!

அட..!!!
அடைமழையே வந்து மடிமீது
அமர்ந்தாலும் - தாமரைக் கொடி, விரும்புவது
"அடிநீரையல்லாமல்"-
மடி நீரை அல்ல!!!
நாளை விடிவது நமக்காக..!!
நம்பு கண்மணியே ..!!!


-தண்ணீர்மலை. மு 
 
அக்னி வெயிலே..!

உன்னை அணைத்து ,

எங்களை காத்தது..!
!


# சாரல் மழை..!

நான் பலரின்
சுமைகளை தாங்குகிறேன் ..!
என்னையும் சேர்த்து,
சுமக்கும் உனக்கு நன்றி
பூமித் தாயே..!

- சுமைதாங்கி .

Tuesday 6 May 2014

மிக அருகே இருந்தும் இணைய இயலாத உறவு..!!!!

கண்ணாடிக்
கூடாரத்திற்க்
குள்ளே நான்..!
அதன் மேல் விழுந்த
மழைத்துளியாய் நீ..!!!



வணக்கம் .!!